எலக்ட்ரீசியன் மாடியிலிருந்து தவறி விழுந்து பலி

by Staff / 24-09-2022 01:26:40pm
எலக்ட்ரீசியன் மாடியிலிருந்து தவறி விழுந்து பலி

மதுரை அருகே பராசக்தி நகர் செந்தமிழ் தெருவை சேர்ந்தவாசுதேவன் என்பவரின் மகன் குமரன் ( 46)
இவருக்கு ரூபா என்ற மனைவியும் கண்ணன் ( 16) என்ற மகனும் பூஜா ஸ்ரீ ( 12) என்ற மகளும் உள்ளனர்.
குமரன் மீனாட்சி நகரில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் தெருவில் உள்ள கட்டிடத்தில் எலெக்ரிக்கல் பிளம்பர் வேலை செய்வதற்காக மாடியில் வேலை செய்தவர் மாடியில் சுவர் இடிந்து மாடியில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து அவனியாபுரம் போலீஸில் புகார் செய்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து குமரன் உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜாஜி மனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

Tags :

Share via