கல்லூரி மாணவர் தற்கொலை
கன்னியாகுமாரி மாவட்டம் அருமனை அருகே முக்கூட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் விஷ்ணு(22).கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் தற்போது பணம் இல்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் விஷ்ணு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில் நேற்று விஷ்ணு அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருமனை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விஷ்ணுவின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :