இபிஎஸ், ஓபிஎஸ் உடன் அடுத்தடுத்து அண்ணாமலை சந்திப்பு

by Staff / 03-02-2023 12:29:19pm
இபிஎஸ், ஓபிஎஸ் உடன் அடுத்தடுத்து அண்ணாமலை சந்திப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் பெரும் குழுப்பம் நீடிக்கிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை பாஜக இன்னும் அறிவிக்காத நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ தனித்தனியாக அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.

 

Tags :

Share via