கடையம் அருகே இளம் பெண்ணை கடத்த முயன்ற காவலர் பணியிடை நீக்கம்.

by Editor / 06-03-2023 10:05:53pm
கடையம் அருகே இளம் பெண்ணை கடத்த முயன்ற காவலர் பணியிடை நீக்கம்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் இவர் மணிமுத்தாறு 9 பட்டாலியனில் காவலராக பணி புரிந்து வருகிறார் இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார் தற்போது அந்தப் பெண்ணுக்கு திருமண நடைபெற உள்ள நிலையில் அந்தப் பெண்ணை மாரியப்பன் மற்றும்  நண்பரும் காவலருமான அருண் என்பருவுடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கடத்த முயன்றுள்ளனர் இதையடுத்து கடையம் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த நிலையில் மணிமுத்தாறு பட்டாலியன் எஸ்.பி இருவரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

 

Tags :

Share via