உலகின் மிக உயரமான ரயில் பாலம்
ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலம் விரைவில் ரயில் போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது. இந்த பாலத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பின் முதல் சோதனை ஓட்டம் ரியாசியில் நடத்தப்பட்டது. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் செனாப் ஆற்றின் மீது 359 மீ (1,178 அடி) உள்ளது. இது பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தைவிட 35 மீட்டர் உயரம் கொண்டது.
Tags :