கரூரில் 70-க்கும் மேற்பட்ட பாஜக-வினர் கைது
சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அந்த நிகழ்வில் பங்கேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரை கண்டித்து அவர்களை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரூர் மாவட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கரூர் இந்து சமய அறநிலை துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 70 - க்கு மேற்ப்பட்டோர் கைது செய்தனர், அப்போது போலீசார், பாஜகவினர்களிடம் தகராறில் ஈடுப்பட்டனர். பாஜகவினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் முற்றவே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், போலீஸ் அராஜகம் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கரூர்- நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
Tags :