வாடிக்கையாளர் தரவுகளை விற்ற பெண் கைது..

by Staff / 19-11-2023 04:56:16pm
 வாடிக்கையாளர் தரவுகளை விற்ற பெண் கைது..

சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பிரவலிக்கா. இவர், கொரட்டூர், பெரியார் நகரில் 'மெர்க்பிளேம்ஸ் டெக்னாலஜிஸ்' என்ற பெயரில் வங்கியில் கடன் பெற்றுத் தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.அவரது நிறுவனத்தில், கொரட்டூரைச் சேர்ந்த குணசுந்தரி என்பவர் 'டெலி காலராக' பணியாற்றி வந்தார். நிறுவனத்தின் வாடிக்கையாளர் தரவுகளை பராமரித்து வந்த குணசுந்தரி, வாடிக்கையாளர் தரவுகள் மற்றும் ஆவணங்களை திருடி, கோடம்பாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு விற்று, கடன் தொகைக்கு ஏற்றுவார், பல லட்சங்கள் கமிஷனாக பெற்றுள்ளார்.தகவலறிந்த பிரவலிக்கா, ஆவடி சைபர் கிரைம் பிரிவில் ஆன்லைனில் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார், கொரட்டூரில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த குணசுந்தரியை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
 

 

Tags :

Share via