தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம்

by Staff / 22-11-2023 01:34:48pm
தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயம்

சென்னை வண்ணாரப்பேட்டை ஜியோ சாலையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். பள்ளி முடிந்து சாலையில் நடந்து சென்ற போது அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் மாணவர்களை கடித்துக் குதறியுள்ளன. காலில் பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெருநாய்களை பிடித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 

Tags :

Share via