சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

by Staff / 19-12-2023 12:18:07pm
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

ஈரோடு மாவட்டம், கோபி பகுதியைச் சோ்ந்தவா் எஸ். புவனேஸ்வரன் (எ) புவனேஸ் (21). இவா் திருமணத்துக்கு பின்னா் தனது மனைவி உடன் காராப்பாடி பகுதியில் புவனேஸ்வரன் வசித்து வந்தாா். இந்நிலையில், புவனேஸ்வரன் மனைவியின் உறவினரான விடுதியில் தங்கி பயிலும் பிளஸ் 2 மாணவியை கடந்த 2019-ஆம் ஆண்டு புவனேஸ்வரன் வீட்டுக்கு வந்துள்ளாா். சில நாள்கள் அங்கு தங்கியிருந்த சிறுமி, பிறகு மீண்டும் விடுதிக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்ட விடுதி காப்பாளா் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது, அவா் கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது. விசாரணையில், புவனேஸ்வரன் வீட்டுக்கு சிறுமி வந்தபோது, அவரை மிரட்டி புவனேஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்ததும், அதனால் சிறுமி கா்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கோபி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி, அவரது பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த வழக்கு ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஆா். மாலதி தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட புவனேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் எம். ஜெயந்தி ஆஜரானாா்.

 

Tags :

Share via