திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு சிறை

by Staff / 13-01-2024 12:38:09pm
திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு சிறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூதாட்டியை வீடு புகுந்து தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், அவரது மகனும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன், மற்றொரு மகனும் கடலங்குடி ஊராட்சிமன்றத் தலைவருமான அறிவழகன் உள்ளிட்ட 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மயிலாடுதுறை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via