பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு

by Staff / 06-04-2024 10:53:11am
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவியை, தனியார் பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத விடாமல் அனுமதி மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, குழந்தைகள் நல ஆணையத்தில் புகார் செய்தார். இந்த மாணி தேர்வு எழுத வந்தால், அங்குள்ள பிற மாணவிகளும் கெட்டுப்போய்விடுவார்கள் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 4 மாதங்களாக பள்ளிக்கு வராததால் தேர்வு அனுமதி சீட்டு தரவில்லை என மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.
 

 

Tags :

Share via