ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது போலீசார் வழக்கு

by Staff / 12-04-2024 02:13:20pm
ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது போலீசார் வழக்கு

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளார். காங்கேயத்தில் நேற்று இரவு தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் விதிமுறைகளை மீறி சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட பாஜக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சி கொடிகள் கட்டப்பட்டன. தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின்பேரில் வேட்பாளர் விஜயகுமார், தமாகா நிர்வாகிகள் தர்மராஜ், சுரேஷ் மீது 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

Tags :

Share via