6 மாத பெண் குழந்தை மீட்பு

by Staff / 25-04-2024 04:15:07pm
 6 மாத பெண் குழந்தை மீட்பு

மதுரை ரயில் நிலைய வளாகத்தில் நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் தனது 6 மாத பெண் குழந்தையுடன் தூங்கியுள்ளார். பின்னர், காலையில் எழுந்து பார்த்தபோது 6 மாத குழந்தை மாயமானது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் இன்று 6 மாத பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via