காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை
பஞ்சாபில் காங்கிரஸ் தலைவரை பெண் ஒருவர் சுட்டுக் கொன்றார். காங்கிரஸ் தலைவர் மேஜர் சிங் தலிவால் தரண் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இருந்தபோது அங்கு வந்த பெண் ஒருவர் தன்னுடன் கொண்டு வந்த துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் தலிவால் உயிரிழந்தார். இதற்கிடையில், கொலையில் ஈடுபட்ட பெண் தலிவாலின் உறவினர் என்றும், தனிப்பட்ட தகராறின் பின்னணியில் இந்த குற்றம் நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Tags :