கொடூரமான சாலைவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி.

by Editor / 04-05-2023 08:47:18am
கொடூரமான சாலைவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பலோட் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர்  திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் பயணித்த போது பொலிரோ வாகனம் மீது லாரி மோதியதில் அந்த வாகனத்தில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர்..புரூர் சௌகி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் இடத்திலேயே 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஒரு குழந்தை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்துவந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

 

Tags : 10 members of the same family were killed when a lorry collided with a Bolero vehicle in Balod district of Chhattisgarh

Share via