பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்க முடிவு

by Editor / 20-10-2021 06:12:24pm
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர்  அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்க முடிவு


பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான அமரீந்தர் சிங் விரைவில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார்.


நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
பாரதிய ஜனதா கட்சி தான் இயற்றிய கருப்பு சட்டங்களை வாபஸ் பெற்றால் அந்தக் கட்சியுடன் கூட்டுச் சேருவதற்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.விரைவில் கட்சி பெயர் வெளியிடப்படும்.
ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்.அகாலி தள குழுக்களுடன் இணைந்து செயல்படுவதற்கு தனது கட்சி தயங்காது.


பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது. அந்த அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் பஞ்சாப் மக்களின் வளர்ச்சிக்காகவும் இனி செயல்பட போகிறேன். பஞ்சாப் மக்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றும் வரை தான் ஓயப் போவதில்லை என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via