11 மாவட்டங்களில்  இடியுடன் மழை பெய்யும்  வானிலை ஆய்வு மையம் தகவல்.

by Editor / 22-04-2021 05:42:35pm
11 மாவட்டங்களில்  இடியுடன் மழை பெய்யும்  வானிலை ஆய்வு மையம் தகவல்.

 

தென்தமிழகம் உள்பட 11 மாவட்டங்களில்   இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. 
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வளிமண்டல சுழற்சியால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களான சேலம், தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,ஈரோடு ,தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
 மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான சேலம் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி ,ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,வேலூர், தென்காசி, திருநெல்வேலி ,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்கள் மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
24ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை தொடரும்சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.இவ்வாறு அதில் கூறியுள்ளது.

 

Tags :

Share via