குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை அறிவிப்பு
தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத்தலைவிகளுக்கு, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர், பெண்களுக்கான தனி ஸ்டார்ட் அப் திட்டம் தொடங்கப்படும். சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும். 1000 புதிய பேருந்துகள் வாங்க, 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்க, ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Tags :