வில்லன் நடிகர் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 28-06-2022 09:05:29am
வில்லன் நடிகர் தூக்கிட்டு தற்கொலை

கேரள மாநிலம் கொச்சியை அடுத்த களமச்சேரிபகுதியை சேர்ந்தவர்  பிரபல மலையாள வில்லன் கதாபாத்திர நடிகர் என்.டி.பிரசாத்.குடும்ப தகராறு காரணமாக பிரசாத்தின் மனைவி அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் அவருக்கு தனிப்பட்ட வாழ்வில் பொருளாதார பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்தோடு காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த ஜூன் 25 ஆம் தேதி தனது வீட்டின் முன்னே உள்ள மரத்தின் கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரது உடல் மரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதை முதலில் இவரது குழந்தைகள் தான் பார்த்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அக்குழந்தைகள் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். பிறகு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு உடற்கூராய்வுக்குப்பின் அவரது உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு நேற்று அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைப்பெற்றன.

பிரபல நடிகரான பிரசாத் இதுவரை 40க்கும் மேற்பட்ட மலையாளப்படங்களில் சிறு சிறு வேடங்களில் வந்துள்ளார். சில படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில்நடித்துள்ளார். மேலும் இவர் குறித்து போலீஸார் கூறுகையில், பல்வேறு காவல் நிலையங்களில் பிரசாத் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்றும்,எர்ணாகுளம் கலால் வட்டம் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது

 

Tags : Famous Malayalam villain actor ND Prasad in Kalamassery next to Kochi, Kerala

Share via