கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ரயில் நிலையங்கள் மூலம் கடத்த முயன்ற 1045 குழந்தைகள் மீட்பு
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆப்ரேஷன் நன்ஹே என்ற திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களை கடத்த முயன்ற 344 சிறுமிகள் உள்பட 1045 சிறார்கள் மீட்டதாக ரயில்வே பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்
.
மிஷன் சிவா திட்டம் மூலம் ரயில் நிலையங்களை தற்கொலைக்கு முயன்ற 22 பெண்கள் உள்பட 42 பேரை மீட்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறத்தாள 13,000 ரயில்களில் பயணிக்க முதியோர் கர்ப்பிணிகள் தனியாக பயணிக்கும் பெண்கள் உள்பட குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் கடத்த முயன்ற நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து ஐம்பத்தி ஏழு பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags :