அ.தி.மு.க முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்தாா்.
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் எம். எல். ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி .பிரபாகரனிடம் வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளருக்கு கருத்துக்களை சொல்லும் விதமாக நேற்றும் இன்றும் தம் எக்ஸ் வலைதள பதிவில் பதிவிட்டிருந்த நிலையில் அவர் இன்று இந்த முடிவை எடுத்து உள்ளார். ஏற்கனவே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் ராஜனமா செய்த நிலையில் இவரது ராஜினாமாவும் சேர்த்து அதிமுகவினுடைய சட்டமன்ற உறுப்பினர் ஐந்து பேர் பதவி விலகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















