எல்.கே. சுதீஷ் மனைவியிடம் மோசடி- 2 பேர் கைது.

by Editor / 22-02-2024 09:47:18am
எல்.கே. சுதீஷ் மனைவியிடம் மோசடி- 2 பேர் கைது.

விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி 43கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். லோகோ பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி  வரும் சந்தோஷ் சர்மா என்பவர் மாதவரத்தில் 250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.  இங்கு 78 வீடுகளை மறைந்த விஜயகாந்தின் மைத்துனர் சுதிஷின் மனைவி பல கோடி கொடுத்து சந்தோஷ் சர்மாவிடம் ஒப்பந்தம் போட்டதாக தெரிகிறது. ஒப்பந்தத்தின் படி வீடுகளை ஒதுக்காமல் 48வீடுகளை வேறு ஒருவருக்கு விற்று 43கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் பில்டர் சந்தோஷ் சர்மா மற்றும் உதவியாளர் சாகர் ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை.

 

Tags : எல்.கே. சுதீஷ் மனைவியிடம் மோசடி- 2 பேர் கைது

Share via