தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு ஓட்டல்களில் உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம்.

by Editor / 22-02-2024 09:52:40am
தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு ஓட்டல்களில்  உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம்.

தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ.60க்கு விற்ற புழுங்கல் அரிசி, இப்போது கிலோ ரூ.68 ஆக உயர்ந்துவிட்டது.. ரூ.60க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்து விட்டது. அரிசி விலை உயர்வு காரணமாக சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

Tags : ஓட்டல்களில் உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம்.

Share via