சிறுவனை காலால் மிதித்த காவலர்

by Staff / 17-07-2023 01:14:31pm
சிறுவனை காலால் மிதித்த காவலர்

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பெல்டாரா ரோடு ரயில் நிலையத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ரயில்வே கான்ஸ்டபிள் ஒருவர் கடுமையாக நடந்து கொண்டார். ரயில்வே நடைபாதையில் தூங்கி கொண்டிருக்கும் சிறுவனை அவர் காலால் எட்டி உதைத்து பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டதால் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து உயர் அதிகாரிகள் அந்த கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்தனர்.

 

Tags :

Share via