தலைமை செயலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு.

by Staff / 17-07-2023 01:10:46pm
 தலைமை செயலகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு.

சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அறக்கட்டளை ஆகிய பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் சோதனை நடத்தப்பட்டது போல், இன்று பொன்முடியின் அறையிலும் சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via