ஹெச்.ராஜா -மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 129 போ்  மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு.

by Admin / 25-06-2024 11:14:30am
ஹெச்.ராஜா -மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 129 போ்  மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு.

*ஹெச்.ராஜா மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு*

 

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாரயத்தால் ஏற்பட்ட மரணத்தை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் கடந்த 22-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றது..

ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அரசு ஊழியர்களை பணி இடையூறு ஏற்படுத்தியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் பாஜக மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 129 போ்  மீது தல்லாகுளம் காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை.காவல்துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்த போது காவல்துறையினருடன் பாஜகவினர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

 

Tags :

Share via