குவைத் தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 41 பேர் பலி

by Staff / 12-06-2024 02:59:52pm
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 41 பேர் பலி

குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்கஃப் பகுதியில் உள்ள கட்டடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் என மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தில் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகைமூட்டத்தில் சிக்கி பலர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த கே.ஜி.ஆபிரகாம் என்ற தொழிலதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo