தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள்.

by Editor / 01-06-2024 11:34:21am
தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள்.

சென்னை மாதவரத்தில் தாய்ப்பால் விற்பனை செய்து வந்த கடைக்கு நேற்று (மே 31) சீல் வைக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை உத்தரவிடப்பட்டுள்ளது. வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் லைசன்ஸ்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள்  அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து 94440 42322 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

 

Tags : தாய்ப்பால் விற்பனை

Share via