தேனி மாவட்ட முதல்போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு.

by Editor / 01-06-2024 11:36:41am
தேனி மாவட்ட முதல்போக சாகுபடிக்கு  பெரியாறு அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு.

பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல்போக சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுள்ளதால் அணையின் நீர்மட்டம் நேற்று 119.10 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, தேனி கலெக்டர் ஷஜீவனா இன்று (ஜூன் 1) பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.

 

Tags : பெரியாறு அணையிலிருந்து நீர்திறப்பு

Share via