வேறொருவருடன் உடலுறவு: காதலியை கொன்ற காதலன்
பெங்களூரு ராம்மூர்த்திநகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ண குமாரியும், சந்தோஷ் டாலியும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தனித்தனியாக பெங்களூரு வந்தனர். இருவரும் அழகு நிலையத்தில் பியூட்டிஷியன் தொழிலில் பணிபுரிந்து வருவதால், இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனிடையே வேறொரு நபருடன் கிருஷ்ண குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டதால், காதலர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு, கிருஷ்ணகுமாரி வேறு ஒருவருடன் உடலுறவு கொண்டதாகக் கூறி சந்தோஷ் டாலி தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதால், ஆத்திரமடைந்த சந்தோஷ், காதலியை கடுமையாக தாக்கி, கழுத்தை நெரித்து, இரும்பு கம்பியால் அடித்துள்ளார். வலியால் துடித்த அவர், தன் தோழியை வீடியோ கால் மூலம் அழைத்துள்ளார். அங்கு விரைந்த தோழி, கிருஷ்ணகுமாரி சுயநினைவை இழந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த ராமமூர்த்தி நகர் காவல்துறையினர், குற்றவாளியை கைது செய்தனர்.
Tags :