"இந்துத்துவா நம்பிக்கை கொண்டவர் ஜெயலலிதா" - எல்.முருகன்
மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஒன்று கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது , “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்துத்துவா மீதும் ஆன்மீகம் மீதும் நம்பிக்கை கொண்டவர். ராமர் கோயிலை கட்ட ஆதரவு தெரிவித்தவர். பொதுசிவில், காஷ்மீரில் 370 பிரிவு ரத்துக்கு ஆதரவு கொடுத்தவர்” என்றார். முன்னதாக இதே கருத்தை தெரிவித்த அண்ணாமலைக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் எல்.முருகன் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :