ரயில் நிலையத்தில் அதிரடியாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்த காவல்துறை

by Editor / 07-09-2022 09:31:39am
ரயில் நிலையத்தில் அதிரடியாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்த காவல்துறை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்தியாவின் ஒற்றுமை(bharat jodo yatra) என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் இருந்து 3500 கி.மி.150 நாட்கள் பயணத்தை தொடங்குகிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் #GoBackRahul என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், "எது நடப்பினும் நாளை தமிழகம் வரும் தமிழின துரோகி ராகுலுக்கு கருப்பு கொடி இந்து மக்கள் கட்சி காட்டுவது உறுதி" என்று பதிவிட்டிருந்தார். அதோடு, கன்னியாகுமரி யாத்திரை தொடங்கும் பகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக கறுப்பு கொடி காட்ட திட்டமிட்ட அர்ஜூன் சம்பத், கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் குமரி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காத்திருந்த போலீசார் அர்ஜூன் சம்பத்தை கைது செய்தனர். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் அதிரடியாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்த காவல்துறை
 

Tags :

Share via