செந்தில் பாலாஜியும் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையரிடம் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆயினர்.

by Admin / 25-07-2026 02:11:18pm
செந்தில் பாலாஜியும் அசோக்குமாரும்  திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையரிடம் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆயினர்.

தமிழக வெற்றிக்கழக அரசை கவிழ்க்கும் முகமாக சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பெறும் மூலம் விலைபேசி ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டதாக திருநாவுக்கரசு உள்பட 12 பேரை திருவல்லிக்கேணி காவல் துறையினர் கைது செய்து இருந்தனர். இவ் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவருடைய தம்பி அசோக் குமார் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுடன் அவரது இல்லத்தில் காவல்துறையினர் சரண்டர் ஆக வேண்டி நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இதனை அடுத்து செந்தில் பாலாஜியும் அசோக்குமாரும் முன் ஜாமின் பெற்றிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி இருந்தும் இன்னும் ஏன் காவல்துறை விசாரணைக்கு செல்லவில்லை என்ற கேள்வியை எழுப்பியதை தொடர்ந்து அவர்கள் இன்று திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையரிடம் விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆயினர்.

 

Tags :

Share via
Logo