முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் மனு தள்ளுபடி
சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அரங்கநாயகம் மனைவி கலைச்செல்வி, மகன்கள் சந்தன பாண்டியன், முருகன் அதியமான் விடுதலையை எதிர்த்த லஞ்ச ஒழிப்பு துறை அப்பீல் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்தை பறிமுதல் செய்யும்படி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :