2026 சட்டமன்ற தேர்தலையும் இபிஎஸ் புறக்கணிப்பாரா? - அண்ணாமலை
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டிருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பாரா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார். மேலும் அவர், "2026 சட்டமன்ற தேர்தலின் போது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீராகி விடுமா? சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனதால் விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறேன் என கூறிய எடப்பாடி இன்று வேறு காரணம் கூறுகிறார். இபிஎஸ் தமிழக மக்களுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இல்லை" என்று கூறியுள்ளார்.
Tags :