சாலை விபத்தில் ஒருவர் பலி

by Staff / 10-12-2022 04:09:02pm
சாலை விபத்தில் ஒருவர் பலி

செங்கல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த தண்டபாணி மகன் ரகுபதி, 58. இவர், கடந்த 29ம் தேதி, வீட்டில் இருந்து, ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வாகனத்தில், பட்ரவாக்கம் சென்றார்.அங்கிருந்து, மாலை 6: 30 மணிக்கு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வல்லம் பாதை நகர் அருகில் வந்த போது, சாலையில் மாடு குறுக்கே வந்ததால், வாகனம் மாடு மீது மோதியது.இதில், கீழே விழுந்த தகுபதி, படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு, அவர் இறந்தார்.இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via