முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

by Staff / 16-03-2023 04:35:09pm
முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.தமிழகத்தில் தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி முடிவடைகிறது. இது முடிந்த பிறகு 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். இதன்படி ஏப்ரல் 24 முதல் இந்தத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்கும் பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், "1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியிலேயே தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via