ஆப்பூர் ஏரி நீரில் மூழ்கிய வாலிபர் பலி

by Staff / 13-04-2023 05:12:46pm
ஆப்பூர் ஏரி நீரில் மூழ்கிய  வாலிபர் பலி

திருமணமாகி மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.இவர், நேற்று முன்தினம் இரவு, பக்கத்து கிராமமான ஆப்பூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார்.இரவு 10: 00 மணிக்கு ஆப்பூரில் இருந்து மீண்டும் வீட்டிற்கு ஏரிக்கரை வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது கால் தவறி ஏரியில் தவறி விழுந்து உள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.இரவு, முருகன் வீட்டிற்கு செல்லாததால் உறவினர் பல இடங்களில் தேடி ஏரியில் இருந்த உடலை கண்டு பிடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆப்பூர் கிராம நிர்வாக அலுவலர் சம்பத் குமார், பாலுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இவருக்கு திருமணமாகி மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

Tags :

Share via