கள்ளழகர் சித்திரை திருவிழா மே ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை.
மதுரை அழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் சித்திரை திருவிழா 30 ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது .விழாவினுடைய முக்கிய நிகழ்வான நாலாம் தேதி மதுரை 3 மாவடி, தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளழகர் எதிர்சேவையும். இதனை அடுத்து ஐந்தாம் தேதி காலை 5 45 முதல் 6 12 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியானது நடைபெறும் .இந்நிகழ்விற்கு வரும் பக்தர்களை பாதுகாப்பிற்காக மதுரை ஆட்சியர் ,ஆணையர் காவல் ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் நேரடி ஆய்வு நடத்திய ஆட்சியர் பக்தர்களின் வருகையை தொடர்ந்து ஏற்பாடுகள் செய்வதற்காகவும் குடிநீர் வசதி போன்ற முன்னேற்பாடு பணிகளை செய்வதற்காகவும் ஆய்வு கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஆட்சியாளர், மே ஐந்தாம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறினார்.
Tags :