ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு

by Staff / 19-02-2024 11:47:49am
ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு : முதலமைச்சர்  சம்பாய் சோரன் உத்தரவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு தயார் என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via