பெண் துாக்கிட்டு பலி - ஆர்.டி.ஓ., விசாரணை

by Staff / 25-11-2023 04:56:27pm
பெண் துாக்கிட்டு பலி  - ஆர்.டி.ஓ., விசாரணை

சேந்தமங்கலம் அடுத்த, சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்பாண்டியன், (28) கட்டட தொழிலாளி. இவரது உறவினரான கோகிலாவின் மகள் ரம்யா, (25) என்பவரை கடந்த, 2018ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிங்களாந்தபுரம் கிழக்கு தெருவில், முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களுக்கு, 4 வயதில் ஒரு மகன், ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளனர். நேற்று காலை, தமிழ்பாண்டியன் வேலைக்கு சென்று விட்டார்.அப்போது, வீட்டில் தனியாக இருந்த ரம்யா, மின் விசிறியில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் 'செய்த ஐந்தாண்டில் ரம்யா தற்கொலை செய்து கொண்டதால், நாமக்கல் ஆர். டி. ஓ. , சரவணன் விசாரணை நடத்தி வருகிற 3 வருகிற பேளுக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via