ஆணவக்கொலை செய்த தந்தை
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சித்தம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஓம்கார கவுடா. இவரது 15 வயது மகள் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற பழங்குடியின இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் ஓம்கார கவுடாவுக்கு தெரியவர மகளை கண்டித்துள்ளார். இருப்பினும், மீண்டும் காதலனை சந்தித்து பேசி வந்துள்ளார். பழங்குடியின இளைஞருடனான காதலை கைவிட மறுத்ததால் தனது மகளை ஆணவக் கொலை செய்து விடும் முடிவுக்கு வந்தார் ஓம்கார கவுடா. பின்னர், மகளை சினிமா தியேட்டர், ஹோட்டல், நகை கடை, கோவில் என்று பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். கடைசியாக இரவில் வீடு திரும்பும் வழியில் உள்ள கால்வாயில் தரதரவென்று இழுத்து சென்று தண்ணீரில் வைத்து அழுத்தி இருக்கிறார். இதில் மூச்சு திணறிய அப்பெண் அப்பா என்று கதறியபோதும் தண்ணீரில் அழுத்து கொலை செய்துள்ளார்.திருப்பதிக்கு தப்பி சென்ற ஓம்கார கவுடா மகளை காணவில்லை என போலீசில் புகாரளித்து ஊரை நம்ப வைத்துள்ளார். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் தனது மகளை ஆணவக்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Tags :