சாலை விபத்து.. சிறுமி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலி

by Staff / 04-05-2023 05:32:01pm
சாலை விபத்து.. சிறுமி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து சென்றுள்ளது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது எதிரே சென்னை நோக்கி வந்த ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில், 2 பெண் குழந்தைகள் 3 பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via