இந்தியாவே போற்றும் சக்தியாக முதலமைச்சர் விஜய் வளர்ந்துள்ளார்: சபாநாயகர் பிரபாகர்
தமிழகத்தில் ஒரு புது யுகம் பிறந்திருப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன் 16) நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்களுக்கான 2 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாமின் தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், "முதலமைச்சர் விஜய் செல்லும் இடமெல்லாம் வெல்லும் மாபெரும் சக்தியாகவும், இந்தியாவே போற்றும் தலைவராகவும் வளர்ந்துள்ளதாக" பாராட்டியுள்ளார். மேலும், தமிழக மக்கள் எல்லாரையும் அரவணைக்கும் வகையில் தவெகவிற்கு வாக்களித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Tags :



















