நெல்லை விறகு வியாபாரி கொலையில் 5 பேர் கைது
நெல்லை சுத்தமல்லி அருகே விறகு வியாபாரி சண்முகவேல் நேற்றிரவு (ஜூன் 15) கொடூர கொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் இந்த கொலையில் தற்போது ஐயப்பன் (21) இசக்கி முத்து (எ) கொடி முத்து (27) சிவசங்கரன் (26) மாரி செல்வம் (21) மற்றும் 17 வயது இளஞ்சிறார் உட்பட ஐந்து பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Tags :


















