கோவில் உண்டியல் உடைத்து துணிகரக் கொள்ளை

by Staff / 26-10-2022 05:45:31pm
கோவில் உண்டியல் உடைத்து துணிகரக் கொள்ளை

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த அண்மை நாயக்கர் வீதியில் அருள்மிகு ஸ்ரீ ரகுபகவான் ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் உள்ளது, இந்த கோவிலின் பூசாரி, கடந்த 23ஆம் தேதி இரவில் பூஜையை, முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார், மீண்டும் நேற்று வந்து பார்த்தபொழுது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு, உடைக்கப்பட்டு கிடந்தது, இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது, மூன்று பித்தளை விளக்கு, ஒரு தாமரை செம்பு, அம்மன் கழுத்தில் கிடந்த தாலி ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது, இது குறித்து கோவில் நிர்வாகி கணேசன் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via