பெற்றோர் கண்டித்ததால் எலிமருந்து உண்டு தற்கொலைக்கு முயன்ற பத்தாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by Editor / 04-08-2022 02:23:42pm
பெற்றோர் கண்டித்ததால் எலிமருந்து உண்டு தற்கொலைக்கு முயன்ற பத்தாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஈரோடு அருகே தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் பெற்றோர் கண்டித்த மனவருத்தத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பத்தாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கன்னுகடை  பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது என்ற கூலித் தொழிலாளியின் மகள் சபினா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த காலாண்டு தேர்வில் மாணவி மதிப்பெண் குறைவாக பெற்றதாகவும் இதனால் அடிக்கடி டிவி பார்க்காத எனக் கூறி பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. தனக்கு படிப்பு வராததால் மன உளைச்சலில் இருந்த மாணவி கடந்த ஒன்றாம் தேதி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மாணவி அடிக்கடி வாந்தி எடுத்ததால் அன்றைய தினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

 

Tags :

Share via