தனக்குத்தானே முட்புதரில் பிரசவம் பார்த்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதி

by Editor / 27-05-2022 03:17:15pm
தனக்குத்தானே முட்புதரில் பிரசவம் பார்த்த பெண்  அரசு மருத்துவமனையில் அனுமதி

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகேயுள்ள இனாம் ரெட்டியப் பட்டியை சேர்ந்தவர் சசிகலா (38) இவரது கணவர் தர்மராஜ் சில மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இந்நிலையில்,திருப்பூரில் வேலை செய்து வந்த சசிகலா தகாத உறவால் கர்ப்பம் அடைந்துள்ளார். நிறை மாத கர்ப்பிணியான இவர் அங்கிருந்து சில நாட்களுக்கு முன்பு கிளம்பி ஊருக்கு வந்துள்ளார். குடும்பத்தினரும், ஊராறும் அவரை ஒதுக்கியுள்ளனர். இந்நிலையில், மணப்பாறை ஆண்டவர் கோவில் அருகேயுள்ள பழைய பாலம் கீழ்புறம் உள்ள முட்புதறில் இன்று அதிகாலை தனக்குத்தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில், பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை அங்கேயே போட்டுவிட்டு, அருகில் உள்ள கோவில் ஒன்றில் சசிகலா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். காலையில் அப்பகுதிக்கு சென்றவர்கள் குழந்தையின் அழுகுரலை கேட்டு அங்கு சென்று பார்த்ததுள்ளனர். அத்துடன், ரத்தக் கறையுடன் கோவிலில் கிடந்த சசிகலாவையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : The woman, who saw herself giving birth in the bush, was admitted to the government hospital

Share via