கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

by Staff / 26-06-2024 01:34:31pm
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கோவை, நீலகிரி மாவட்டங்களின் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (புதன்கிழமை) தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags :

Share via