சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு முதல் நாளே கடும் எதிர்ப்பு

by Staff / 26-06-2024 01:52:49pm
சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு முதல் நாளே கடும் எதிர்ப்பு

மக்களவையில், அவசர நிலை குறித்தும், இந்திரா காந்தியை கண்டித்தும் சபாநாயகர் ஓம்பிர்லா பேசியதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு. தேர்வு செய்யப்பட்ட முதல் நாளிலேயே ஓம்பிர்லாவின் பேச்சால் சர்ச்சை. சபாநாயகரை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது நடந்தவற்றை பிரதமர் சுட்டிக்காட்டி கூறியதை சபாநாயகர் குறிப்பிட்டதற்கு மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நாளை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via